விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம் பாடின ஆடின கேட்டு படு நரகம் வீடின வாசற் கதவு
|
[2461.0] |
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் கற்ற மொழி ஆகிக் கலந்து
|
[2462.0] |
கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? அலர்ந்தலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து
|
[2463.0] |
வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் விண் ஆகி தண்ணளி ஆய் மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் சார்ந்தவர்க்குத் தன் ஆற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்
|
[2464.0] |
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில்
|
[2465.0] |
Back to Top |
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த வல்லாளன் வானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன் நெஞ்சத்து உளன்
|
[2466.0] |
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும் என் ஒப்பார்க்கு ஈசன் இமை
|
[2467.0] |
இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு உண்டான் உலகோடு உயிர்?
|
[2468.0] |
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது
|
[2469.0] |
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு
|
[2470.0] |
Back to Top |
வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான் பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே தாழ்வாய் இருப்பார் தமர்
|
[2471.0] |
தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும் அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
|
[2472.0] |
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கரு இருந்த நாள் முதலாக் காப்பு
|
[2473.0] |
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன் ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்
|
[2474.0] |
மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு வேம்பும் கறி ஆகும் என்று
|
[2475.0] |
Back to Top |
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை இடம் நாடு காண இனி
|
[2476.0] |
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்
|
[2477.0] |